பசுந்தழை உரம் என்பது வேறு இடங்களில் கொண்டு வரப்பட்ட இலைகள் , மரங்களின் கொம்புகள் , புதர்செடி , சிறு செடிகளை உபயோகித்தல் ஆகும் . காட்டு மரங்களின் இலைகள் தான் பசுந்தழை உரத்தின் முக்கிய மூலதனம் ஆகும் .பயிரிடப்படாத நிலங்கள் , வயல் வரம்பு மற்றும் வேறு இடங்களில் வளரக்கூடிய செடிகளும் பசுந்தழை எருவிற்கான மற்றொரு ஆதாரம்
ஆகும் . பசுந்தழை உரத்திற்கு முக்கியமான செடி வகைகள் : வேம்பு , இலுப்பை , கொளுஞ்சி , சிலோன் வாகை , புங்கம் ( புங்கமியா க்ளாபரா ) எருக்கு , அகத்தி ( செஸ்போனியா க்ரேன்டி ப்ளோரா ) , சுபாபுல் மற்றும் புதர் செடிகள் . இவைகளைப் பயிரிடுவதால் மண் அமைப்பை மேம்படுத்தலாம் . அத்துடன் நீர்படிப்புத்திறன் அதிகரிக்கும் , பயிர்கள் எதுவும் பயிரிடாத பருவத்தில் இவ்வகை உரப்பயிர்களை வளர்க்கலாம் . பசுந்தழை பயிர்களால் களைச்செடி வளர்ச்சிகளை குறைக்கலாம் . காரத்தன்மையுள்ள மண்ணை சீர்படுத்துவதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் வேர் முடிச்சு நூர்புழுக்களையும் கட்டுப்படுத்தலாம் .
0 Comments